Pages

Thursday, March 15, 2012

புரிதல்...




என் தனிமையை 
அலங்கரிபவள் நீ .....
எதோ ஒன்றை 
உன்னிடம் சொல்லிட 
தவிக்குது என் மனம் .....
அதை சொல்லிட முடியாமல் 
நான்- என்றோ நீ
என்னை புரிவாய் 
என்ற நம்பிக்கையுடன் 
நகருகின்றன இன்று-
என் நாட்கள் ...

Monday, March 12, 2012

மனம்



நிமிடங்கள் 
ஒவ்வொன்று 
கழியும் போதும்
என் வாழ்நாள் 
குறைகின்றதே 
என எண்ணவில்லை...
மாறாக 
உன்னுடன் சேர்வதற்கான
நிமிடங்கள் குறைகின்றதே 
என எண்ணி
சந்தோசப்படும் என் மனம்........

மௌன மொழி



நானும் நீயும் 
சந்தித்த வேளைகளில்
நாம் பேச 
மறந்தாலும்
நம் 
கண்கள் 
பேச 
மறப்பதில்லை

நட்பு



உள்ளம் கொண்ட 
நட்பை 
உடனே 
தொலைப்பதற்கு......
அது ஒன்றும் கை துடைத்த 
வெற்று கடதாசி இல்லை....
காவியம் படைக்கும் 
ஒரு சரித்திரம் அது..

ஏக்கம்



உன் கரம் பிடிக்க 
என் 
கைகள் ஏங்கவில்லை..
உன்னை அணைக்கவும் 
அது ஏங்கவிலை...
உன் விழி சிந்தும் கண்ணீரை ....
உன் கைக்கு முன் துடைக்கவே 
அது ஏங்குகிறது,,,,

கண்ணீர் துளி



ரோஜா பூ 
மீதுள்ளது 
பனி துளி அல்ல..
ரோஜா செடியை 
விட்டு பிரிவதை எண்ணி...
ரோஜா பூ 
விடும் 
கண்ணீர் துளி......

நெருடல்



தோழியாக நீ வந்ததால்
மனதிலே நெருடல்கள் 
வரும் வேளை ...
மௌனமாய் உன்னை என் ..
மனத்திலே நினைப்பேன்....
மறுகணமே என்ன ஆச்சரியம் ..
மனதில் வந்த சோகங்கள்
மறைந்து விடுகிறதே ,,,,

 

Popular Posts

Popular Posts On EAB

Man Behind This Blog